யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை நிலையிலேயே சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கண் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதேவேளை சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன.
தேவையான மருந்துகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அவை கிடைக்கும் தருணத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment