got 2 scaled
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடுப்புச் சட்டம் உடன் திருத்தப்படும்! – ஜனாதிபதி உறுதிமொழி

Share

சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசு வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உருவாகாத பழைமை வாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் இலங்கை விளங்கும். அத்துடன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இலங்கைக்குள் ஜனநாயக விதிமுறைகளுக்கு அமையவே பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத் தரப்படும்.

இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் நாட்டில் நிலவும் போர் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி போன்றே ஜனநாயகமும் நிலைநாட்டப்பட முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

பயங்கரவாதத் தடுப்பு சட்டம் தொடர்பில் அவதானம் செலுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் காலத்தை முன்னிலைப்படுத்தி தீர்வொன்றின் தேவை தொடர்பில் ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் தம்முடைய விஜயத்தின்போது தாம் ஆராய்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கவுள்ளோம் எனவும் இலங்கைக்கு தமது ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.

தேவையான குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகளுக்கு அமைய நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் காணப்படும் திருத்தப்பட வேண்டிய உறுப்புரைகளை திருத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

gu

go 5

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...