88 300x200 1
இலங்கைசெய்திகள்

பண்டாரநாயக்காவுக்கு ஒரு சட்டம் திலீபனுக்கு ஒரு சட்டமா?

Share

தியாக தீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமீறல். ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார நடைமுறையா?

இதுதான் அரசின் இனநல்லிணக்கத்தின் வெளிப்பாடா? அனைவரும் ஒற்றுமையாக தேசத்தை கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி ஐ.நாவின் உரையில் ஒற்றுமை வெளிப்படுகின்றதா? இதுதான் அரசின் இனரீதியான அணுகுமுறையா?

இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 34வது தினம் கடைப்பிடிக்க அவரின் சிலைக்கு அண்மையில்கூட செல்ல முடியாது தடுக்கப்பட்டோம்.

அஞ்சலி செலுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறினார் எனும் குற்றச்சாட்டில் காட்டுமிராண்டித்தனமாக கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் இராணுவத்தினரும் பொலிஸார் நினைவுகூர்தலுக்கு தடைகளை ஏற்படுத்தினர்.

ஆனால் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 62வது நினைவுதினம் பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்க சமாதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் பங்காளிக் கட்சியினர் எனப் பெருமளவானோரின் பிரசன்னத்துடன் தடைகள் இன்றி அஞ்சலி நடைபெற்றுள்ளது.

அவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களை அஞ்சலிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழர்களின் நினைகூரலை மாத்திரம் தடுக்கின்றது என்பதே எமது பிரச்சினை.

தனிமைப்படுத்தல் சட்டத்தை தமக்குப் பிடிக்காத விடயங்களுக்கு அரசு பயன்படுத்துகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

88

6666

தொடர்புடைய செய்தி:

பண்டாரநாயக்கவின் நினைவு தினம் இன்று!

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...

7 10
இலங்கைசெய்திகள்

அதிரும் தமிழக திரைத்துறை..! தொடரும் கைது நடவடிக்கைகள்

தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள்...

8 7
உலகம்செய்திகள்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பின் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு

இலங்கை உட்பட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்காக...

9 6
இலங்கைசெய்திகள்

9 வயது சிறுமிக்கு தாயின் காதலனால் நேர்ந்த துயரம்

புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் 9 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக தொடர்ந்து தகாத உறவுக்கு உட்படுத்திய...