rrrr
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற தடையுத்தரவை கல்லறையில் சமர்ப்பியுங்கள் – மகன் வேண்டுகோள்

Share

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்று 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியில் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன என கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றில் தடை உத்தரவு கோரி வழக்கு பதிவு செய்தனர்.

அதன்படி முல்லைத்தீவு நீதிமன்றம் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களாக து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி மற்றும் 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்று பொலிஸ் தடையுத்தரவை வழங்க சென்ற போது,

உயிரிழந்தவரின் மகன் ‘‘அப்பா உயிரிழந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்கான தடையுத்தரவை நான் வாங்க முடியாது.

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் சென்று அவரது கல்லறையில் சமர்ப்பியுங்கள்’’ பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பொலிஸார் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

தொடர்புடைய செய்தி:
திலீபனை நினைவேந்த ரவிகரனுக்கு தடையுத்தரவு!

https://tamilnaadi.com/news/local/2021/09/25/ravikaran-banned-for-remembering-dileepan/

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 20260123 WA0115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டட்லி சிறிசேனவின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ரூ. 700 இலட்சம் அபராதம்! உண்மைகளை மறைத்ததாகச் சுங்கத்துறை நடவடிக்கை!

பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன இறக்குமதி செய்த அதிநவீன ‘ரோல்ஸ் ராய்ஸ்’ (Rolls-Royce) காருக்கு, இலங்கைச்...

images 2 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் மாவட்டத்தில் ரூபாய் 50,000 கொடுப்பனவு 98% வழங்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 99% பயனாளிகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் 91% வீதமானவர்களுக்கும், அநுராதபுர மாவட்டத்தில் 84% பயனாளிகளுக்கும்,...

images 1 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூறாவளி நிவாரணம்: பதுளை மக்களுக்குச் சிகிச்சையளிக்க கேரளாவிலிருந்து வந்த சிறப்பு மருத்துவக் குழு!

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்தில் உள்ள “சுரக்சா” முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய...

22 624c54ac70b92
உலகம்செய்திகள்

இந்த ஆண்டு $1.5 பில்லியன் டொலர் முதலீட்டை இலக்கு வைக்கும் இலங்கை! கடந்த ஆண்டின் சாதனையை முறியடிக்குமா?

இந்த ஆண்டு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான இலங்கை இலங்கை...