rrrr
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற தடையுத்தரவை கல்லறையில் சமர்ப்பியுங்கள் – மகன் வேண்டுகோள்

Share

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்று 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியில் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன என கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றில் தடை உத்தரவு கோரி வழக்கு பதிவு செய்தனர்.

அதன்படி முல்லைத்தீவு நீதிமன்றம் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களாக து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி மற்றும் 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்று பொலிஸ் தடையுத்தரவை வழங்க சென்ற போது,

உயிரிழந்தவரின் மகன் ‘‘அப்பா உயிரிழந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்கான தடையுத்தரவை நான் வாங்க முடியாது.

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் சென்று அவரது கல்லறையில் சமர்ப்பியுங்கள்’’ பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பொலிஸார் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

தொடர்புடைய செய்தி:
திலீபனை நினைவேந்த ரவிகரனுக்கு தடையுத்தரவு!

https://tamilnaadi.com/news/local/2021/09/25/ravikaran-banned-for-remembering-dileepan/

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...