rrrr
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற தடையுத்தரவை கல்லறையில் சமர்ப்பியுங்கள் – மகன் வேண்டுகோள்

Share

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்று 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியில் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன என கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றில் தடை உத்தரவு கோரி வழக்கு பதிவு செய்தனர்.

அதன்படி முல்லைத்தீவு நீதிமன்றம் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களாக து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி மற்றும் 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்று பொலிஸ் தடையுத்தரவை வழங்க சென்ற போது,

உயிரிழந்தவரின் மகன் ‘‘அப்பா உயிரிழந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்கான தடையுத்தரவை நான் வாங்க முடியாது.

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் சென்று அவரது கல்லறையில் சமர்ப்பியுங்கள்’’ பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பொலிஸார் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

தொடர்புடைய செய்தி:
திலீபனை நினைவேந்த ரவிகரனுக்கு தடையுத்தரவு!

https://tamilnaadi.com/news/local/2021/09/25/ravikaran-banned-for-remembering-dileepan/

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...