அரசியல்இலங்கைசெய்திகள்

நிமல் லான்சா பதவி துறப்பின் பின்னணி என்ன?

Share
nimal lanza 1
Share

பஸில் ராஜபக்சவின் மிகவும் நெருங்கிய சகாவாக கருதப்பட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா, தான் வகித்துவந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று அதிரடியாக இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசின் செயற்பாடுகளை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவந்த நிமல் லான்சாவை பஸில் தரப்பு ஓரங்கட்டியது. அதுமட்டுமல்ல இராஜாங்க அமைச்சு பதவியை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டதால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுடன் அடிக்கடி முரண்பட வேண்டிய நிலைமை லான்சாவுக்கு ஏற்பட்டது.

இதனால் அமைச்சுக்கு செல்வதை சுமார் ஒரு மாத காலமாக லான்சா தவிர்த்து வந்தார். இதற்கிடையில் மற்றுமொரு இராஜாங்க அமைச்சரால் நிமல் லான்சாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நிமல் லான்சா பதவி துறந்துள்ளார் .

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பிலும் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா கடும் அதிருப்தியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...