அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாம் மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல! – வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி

Share
IMG 20220317 WA0123
Share

நாம் வீதியில் நின்று போராடி மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல. நாம் ஒருபோதும் மடிப்பிச்சை கேட்கவில்லையே எமது பிள்ளைகளின் உயிர்பிச்சையையே கேட்கின்றோமென யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு ரூ.100,000 கொடுப்பனவு, மரணச் சான்றிதழும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை தொடர்பாக இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போனோர் அலுவலகம் , இழப்பீடு, மரண சான்றிதழ் போன்ற விடயங்களை நாங்கள் ஏற்க மறுத்ததால் தற்போது வாழ்வாதார உதவி என்ற பெயரில் ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை வழங்க முற்படுகின்றனர். யாருமே இந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளக்கூடாது. எமது பிள்ளைகளுக்கான கொடுப்பனவு ஒரு லட்சம் ரூபாவா?

கடந்த காலங்களில் எமது பிள்ளைகள் காணாமல் போவதற்கு பிரதானமாக செயற்பட்டவரே இன்று ஜனாதிபதியாக உள்ளார். அவர் இன்று எமது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவிகள் தரப்போவதாக கூறுகிறார்.

நாம் வீதியில் நின்று போராடி மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல. நாம் ஒருபோதும் மடிப்பிச்சை கேட்கவில்லையே எமது பிள்ளைகளின் உயிர்பிச்சையையே கேட்கின்றோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...