தாடியால் வாகனத்தை கட்டி இழுத்து சாதனை புரிந்துள்ளார் செல்லையா திருச்செல்வம் என்ற வயோதிபர்.
மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம், சிறுவயதிலிருந்தே இவ்வாறு வாகனங்களை இழுத்து பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
அந்த வகையில் நேற்றையதினம்(10) மட்டுவில் ஐங்கரன் சனசமூக நிலையத்திலிருந்து பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம் வரையான இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு தனது தாடியால் பட்டா ரக வாகனத்தை இழுத்துச் சாதனை படைத்துள்ளார்.
#srilankaNews