25 683ff02911fe8 1
இலங்கைசெய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

Share

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (04) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது தேர்வு முறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் அமரசூரிய மேலும் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக புலமைப்பரிசில் மாணவர்களுக்கு ஏற்படுத்திய அழுத்தத்தைக் குறைக்க அவர்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2028 அல்லது 2029 ஆம் ஆண்டுக்குள் புலமைப்பரிசில் பரீட்சையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நம்புவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...