கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது, காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக முழங்காவில் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு, நேற்றைய தினம் கைது செய்யப்பட்டவர்கள் பூநகரி மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 61 வயதுடையவர்கள் என்பதுடன், சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

