srilankan airlines9989
இலங்கைசெய்திகள்

தனியார் மயமாகிறது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!!

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீலங்கன் சமையல் கேட்டரிங் மற்றும் தரை சேவை கையாளுகை பிரிவு ஆகியவற்றின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பெறப்படும் பணத்தில் நிறுவனத்தின் கடனை தீர்க்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தரை சேவை கையாளுகை பிரிவை தனி நிறுவனமாக நிறுவி அதன் ஒரு பகுதியை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் நிறுவனத்தை மீட்பதற்கு இதுவே சிறந்த நடவடிக்கையாகும் என்றும் இந்த இரண்டு பிரிவுகளும் தற்போது இலாபத்தில் இயங்குவதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் 966 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 696f67e3b313d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். போதனா வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை மீளாரம்பம்: நோயாளிகளின் நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக செயலிழந்திருந்த CT ஸ்கேன் (CT Scan)...

24 65bb6658d1f06
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 வரை வருமானம்: 2026 பட்ஜெட் நிவாரணங்களுக்கு அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு...

Archuna 1
செய்திகள்இலங்கை

ஜனாதிபதி வடக்கில் சுதந்திரமாக நடக்க மகிந்தவே காரணம்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி அதிரடிப் பேச்சு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வட மாகாணத்தில் சுதந்திரமாக நடைபயிற்சி மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே...

MediaFile 7 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரத்தினபுரியில் இன்று நாட்டின் அதிகூடிய வெப்பநிலை பதிவு!

இன்று (20) நாட்டின் அதிகூடிய வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று மதிய...