srilankan airlines9989
இலங்கைசெய்திகள்

தனியார் மயமாகிறது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!!

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீலங்கன் சமையல் கேட்டரிங் மற்றும் தரை சேவை கையாளுகை பிரிவு ஆகியவற்றின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பெறப்படும் பணத்தில் நிறுவனத்தின் கடனை தீர்க்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தரை சேவை கையாளுகை பிரிவை தனி நிறுவனமாக நிறுவி அதன் ஒரு பகுதியை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் நிறுவனத்தை மீட்பதற்கு இதுவே சிறந்த நடவடிக்கையாகும் என்றும் இந்த இரண்டு பிரிவுகளும் தற்போது இலாபத்தில் இயங்குவதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் 966 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...