ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டை, புறக்கணிப்பதற்கு மலையக தமிழ்க் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
இதன்படி ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன மாநாட்டில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளன.
அத்துடன், அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் குறித்த மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
நாளை மறுதினம் 23 ஆம் திகதி நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்நிலையிலேயே மலையக கட்சிகளும் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளன.
#SriLankaNews
Leave a comment