ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவும் தீர்மானித்துள்ளது.
ஈழத் தமிழர் விவகாரத்தில் அரசு கையாளும் பொறுப்பற்ற அணுகுமுறை மற்றும் பல தரப்புகளிடம் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரமே தமது கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது என ரெலோ அறிவித்துள்ளது.
அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ். வந்திருந்தபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பாதுகாப்பு தரப்பினரால் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் கடும் விசனத்தை வெளியிட்டுள்ள ரெலோ, புறக்கணிப்புக்கு இந்த விடயத்தையும் ஒரு காரணமாக குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி மற்றும் புளொட் என்பன சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews

