அகில விராஜ் காரியவசம் 3
இலங்கை

காரியவசம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசாத்தினால், பொலிஸ் மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த கருத்துத் தொடர்பாக செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான கருத்து குறித்து மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் 17661/2026 என்ற வழக்கு எண்ணின் கீழ் இன்றைய தினம், கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இதன்போது, குறித்த விசாரணைகளுக்காக மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பொலிஸ் மா அதிபர் தொடர்பாக விடுத்த அச்சுறுத்தலான கருத்துத் தொடர்பான தொகுக்கப்படாத காணொளி காட்சிகளைப் பொலிஸாருக்கு வழங்குமாறு 6 ஊடக நிறுவனங்களுக்குக் கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி விடயம், தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு இணங்க நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...