67650058 877890162581041 1915527385059426304 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கதவுகள் திறந்தே உள்ளன! – கூட்டமைப்புக்கு அழைப்பு

Share

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றலாம். அதற்கான கதவுகள் திறந்தே உள்ளன.”

இவ்வாறு ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியும், ஜனாதிபதியின் பாதுகாப்பு விவகார ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளனவா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாம் தமிழ்க்கட்சிகளும் பேச்சு டத்திக் கொண்டிருக்கிறோம். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருடனும் விக்னேஸ்வரனுடனும் பேசி வருகிறோம். எமது கதவு அனைவருக்கும் திறந்திருக்கிறது. ஏனெனில் இது நாட்டை முன்நிறுத்தி யோசிக்க வேண்டிய காலம். தமிழ்க்கட்சிகள் எம்முடன் இணைந்து பணியாற்றுவதில் எம் தரப்பில் எந்தத் தடையும் இல்லை. பேச்சு மூலம் தடைகளைக் கடந்து பிரச்சினைகளுக்கு முடிவு காண முடியும் எனக் கருதுபவரே எமது ஜனாதிபதி. இது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் என்பதை எவரும் மறந்துவிடலாகாது.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...