கட்டம் கட்டமாகச் சிறுவர்களுக்கும் தடுப்பூசி!!
பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும்போது, பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு இதுவரை மகளிர் வார்டு வளாகத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. புதிய பிரிவு நிறுவப்பட்டதன் ஊடாக சிறுவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த முடியும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவுகளை அனைத்து மாகாணங்களிலும் நிறுவுவதே சிறுவர் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் எண்ணக்கருவாகவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment