கடன் வாங்கியாவது நிலைமையை சமாளிப்போம்! – கூறுகிறார் ஜோன்ஸ்டன்

Johnston Fernando

” நாட்டு மக்களை பட்டினியில் கிடக்க இடமளிக்கமாட்டோம். கடன் வாங்கியாவது, நெருக்கடி நிலைமையை சமாளிப்போம். தற்போதைய பிரச்சினைகள் தற்காலிகமானவை. அவை விரைவில் தீர்க்கப்படும்.” – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் பஞ்சம் வரும் என எதிரணிகள் அறிவிப்புகளை விடுத்துவந்தன. அதற்கு நாம் இடமளிக்கவில்லை. மக்களுக்கு தேவையானவற்றை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வழங்கிவருகின்றோம்.

டொலர் பிரச்சினை, எரிவாயு பிரச்சினை மற்றும் எரிபொருள் பிரச்சினையெல்லாம் தற்காலிகமானவை. அவை தீர்க்கப்படும்.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து இந்நாட்டு மக்களின் உயிர்களை ஜனாதிபதியே பாதுகாத்தார். எனவே, இந்த சவால்களையும் ஜனாதிபதி தலைமையில் வெற்றிகொள்வோம்.

நல்லாட்சியில் இடம்பெற்ற கொடூரங்கள் நாட்டு மக்களுக்கு தெரியும். தற்போது எதிரணிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version