tamilni Recovered 3 scaled
இலங்கைசெய்திகள்

ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர் வருமானம்

Share

ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர் வருமானம்

இலங்கைக்கு (Sri Lanka) தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் 330 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் (Coconut Development Authority) தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தென்னையிலிருந்து பெறப்படும் பொருட்களிலிருந்து தேங்காய் எண்ணை உற்பத்தி மற்றும் அழகுசாதன உற்பத்திகள் போன்றவற்றுக்கு சர்வதேச சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக சபையின் தலைவர் ரொஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் (Sri Lanka) பெறுமதி சேர் வரி (VAT) வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு (Ministry of Finance) தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ஆம் ஆண்டில் வரி வருமானம் 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2023 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரி மூலம் 694.5 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...