1622969011 water bill 2
இலங்கைசெய்திகள்

எம்.பிக்களுக்கு ஆப்பு! – இரண்டு மாதங்கள் அவகாசம்!!!

Share

இரண்டு மாத காலத்திற்குப் பின்னர் தமது குடியிருப்புகளுக்கு நீர் கட்டணத்தைச் செலுத்தாத நாடாளுமுன்ற உறுப்பினர்களின் நீர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவித்துள்ளார்.

அந்தக் குழுவின் அதிகாரிகளுக்கும், சபாநாயகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், சபாநாயகர் அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியுள்ளார்.

குடிநீர் கட்டணம் செலுத்தாத உறுப்பினர்களின் பட்டியலை தமக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டதன் பேரில் நேற்று (செப்.15) பட்டியல் கையளிக்கப்பட்டதாக பிரதிப் பொது முகாமையாளர் (வணிகம்) பியால் பஸ்மநாத தெரிவித்தார்.

நாடாளுமன்ற குடியிருப்பில் வசிக்கும் அமைச்சர்களின் நிலுவையில் உள்ள நீர் கட்டணத்துக்காக மூன்று மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை சபை மீளப்பெற வேண்டியுள்ளதாக பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...