அரசியல்இலங்கைசெய்திகள்

உடன் பதவி விலகுங்கள்! – சஜித் வலியுறுத்து

Share
sajith 5
Share

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், இந்த அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தவர்கள்தான், இன்று எதிர்த்து நிற்கின்றனர். எனவே, தற்போது 20 ஐ அல்ல, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான நேரம் வந்துள்ளது. அதனை நாம் செய்தாக வேண்டும்.

அதிகாரங்கள் பிரதமருக்கு பகிரப்பட வேண்டும். ஆனால் நிறைவேற்று அதிகார பிரதமரை உருவாக்காத வகையில் அதிகாரங்கள் சமப்படுத்தபட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் கோலோச்சும்.

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என மக்கள் வலியுறுத்திவருகின்றனர். எனவே, மக்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து, அரசும் ஜனாதிபதியும் பதவி விலகவேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
2 11
இலங்கைசெய்திகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை

திருகோணமலை மாவட்டத்துக்கான அனைத்து முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள்...

2 12
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன....

2 9
இலங்கைசெய்திகள்

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்..

கொடபொல பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கொடபொல பிரதேச...

2 10
இலங்கைசெய்திகள்

புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்…

புத்தளம் – வென்னப்புவ பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் –...