இலங்கையில் நேற்று 160 பேர் கொரோனாவால் சாவு!!
இலங்கையில் நேற்று கொரோனாத் தொற்றால் 160 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சற்றுமுன்னர் அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது.
உயிரிழந்தவர்களில் 87 பேர் ஆண்கள் என்றும், 73 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட ஒருவரும், 30 வயதுக்கு மேற்பட்ட 35 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 124 பேரும் அடங்குகின்றனர்.
இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது.
Leave a comment