4 28
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வந்துள்ள சீன உயர்மட்ட பிரதிநிதி பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு

Share

இலங்கைக்கு வந்துள்ள சீன உயர்மட்ட பிரதிநிதி பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு

இலங்கைக்கு(sri lanka) வருகை தந்துள்ள சீன(china) மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் துணைத் தலைவர் கின் போயோங் (Qin Boyong) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை(harini amarasuriya) நேற்று செவ்வாய்க்கிழமை (17)நாடாளுமன்றத்தில் சந்தித்தார்.

கின் போயோங் உள்ளிட்ட தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பாராட்டியதுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

நோய் கட்டுப்பாடு, நிலையான வளர்ச்சி மற்றும் பல துறைகளில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைப்புகளை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் மேலும் விவாதிக்கப்பட்டது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகவத்த, பிரதமரின் ஊடகச் செயலாளர் விஜித பஸ்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியாவுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ். ருவந்தி டெல்பிட்டிய மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...