அரசியல்இலங்கைசெய்திகள்

அழுத்தம் காரணமாகவே இராஜினாமா செய்தேன்! – கூறுகிறார் அலிசப்ரி

Share
Ali Sabry2
Share

” அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு எனது குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர். எனவே, நான் நிதி அமைச்சர் பதவியை துறந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது .” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது நான்தான் நிதி அமைச்சர். சட்டப்பூர்வமாகவே அப்பதவியை வகிக்கின்றேன். எனது தலைமையிலான குழுவே 18 ஆம் தேதி சர்வதேச நாணய நிதியம் செல்லவுள்ளது.

நிதி அமைச்சு பதவியை ஏற்க நான் தயாராக இருக்கவில்லை. ஆனால் ஆளுங்கட்சியின் விடுத்த கோரிக்கையால்தான் அந்த பதவியை ஏற்றேன். அதன்பின்னர் எனக்கு அழுத்தங்கள் வந்தன. குடும்ப உறுப்பினர்கள்கூட, பதவி துறக்குமாறு வலியுறுத்தினர்.

பொருளாதார நிபுணர்கள்தான் நிதி அமைச்சு பதவியை ஏற்க வேண்டும் என்ற கருத்து சமூகத்திலும் நிலவியது. எனவே, தகுதியான ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க வழிவிட்டே நான் பதவி விலகினேன். எனினும், எவரும் அந்த பதவியை ஏற்கவில்லை. அதனால்தான் நாட்டு நலன் கருதி நான் ஏற்றேன்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...