அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை மீளப்பெறுவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தௌபீக் இன்று அறிவித்தார்.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர். கட்சி முடிவையும் மீறிதான் ஆதரவை வழங்கியிருந்தனர்.
தற்போது அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையிலேயே அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை அவர் மீளப்பெற்றுள்ளார்.
#SriLankaNews