1 26
இலங்கைசெய்திகள்

அனுரவை காப்பாற்றுவதில் மல்கம் ரஞ்சித் தீவிரம்

Share

அனுரவை காப்பாற்றுவதில் மல்கம் ரஞ்சித் தீவிரம்

முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதை கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) இன்றுவரை தவிர்த்து வருகின்ற நிலையில் யுத்த காலத்தில் கடும்போக்காக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு சாதகமான கருத்துக்களை கூறிவந்த மெல்கம் ரஞ்சித், பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வரை குரல் எழுப்பவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக அண்மையில் அவர் தெரிவித்திருந்தார்.

விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் அவ்வப்போது அவருக்கு தெரிவிப்பதாகவும் அரசு, படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணையை மேற்கொள்வதாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், (Anura Kumara Dissanayake), பதவியேற்றவுடன், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்து அங்கு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

இவ்வாறான பிண்ணனியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கேட்டு குரல் ஆரம்பத்தில் குரல் எழுப்பிய அவர், தற்போது அந்த விடயத்திலும் சிறிது அமைதி காத்து கருத்துக்களை வெளியிடுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

Share
தொடர்புடையது
ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...

சூறாவளி
இலங்கை

டைபூன் சூறாவளியின் தீவிரம் – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல்...