34 6 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பதாகைகள் தீயிட்டு எரிக்கப்பட்டு பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு!

Share

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமரை வரவேற்கும் முகமாக வீதிகளில் கட்டப்பட்டு இருந்த பதாகைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் எரிக்கப்பட்டன.

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முகமாக பல நிகழ்வுகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிரதமரின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திற்க்கு வருகை தந்துள்ள பிரதமர், மட்டுவில் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்தார்.

குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ள முல்லைத்தீவில் இருந்து பேருந்தில் வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டுவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில், பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையிலேயே பிரதமரை வரவேற்கும் முகமாக வீதிகளில் கட்டப்பட்டு இருந்த பதாகைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் எரிக்கப்பட்டன.

இதேவேளை யாழில் இருந்து சென்ற வேலன் சுவாமிகள் உள்ளிட்டோரை மட்டுவில் வண்ணாத்தி பாலம் பகுதியில் தடுத்து நிறுத்திய பொலிஸார் அவர்களையும் வாகனத்தில் இருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்தி இருந்தனர்.

நிகழ்வு முடிந்து பிரதமர் நிகழ்விடத்தில் இருந்து புறப்பட்டதும் , போராடகாரர்கள் குறித்த பகுதிக்கு செல்வதற்கு பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, வாகனத்தில் இருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் , பிரதமரை வரவேற்று கட்டப்பட்டு இருந்த பதாகைகளை கிழித்து , தீயிட்டு எரித்து தமது எதிர்ப்பினையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தினர்.

34 5 34 4 34 8 34 3

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...