sri lanka bus 1 scaled
செய்திகள்இலங்கை

நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை!

Share

நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை!

தமக்கு தகுந்த நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பஸ் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துக்கு முன்னர் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் சட்டநடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...