நாட்டில் இன்று முதல் அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 129 பாடசாலைகளினதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 63 ஆரம்பப் பிரிவு பாடசாலைகளினதும் 5 இடைநிலைப்பிரிவுப் பாடசாலைகளினதும், துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட 54 ஆரம்பப் பிரிவு பாடசாலைகளினதும் 7 இடைநிலைப்பிரிவு பாடசாலைகளினதுமாக மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 129 பாடசாலைகளினதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுமே இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.
#SrilankaNews
Leave a comment