image f738f280b5
செய்திகள்அரசியல்இலங்கை

பாகிஸ்தானில் இலங்கையருக்கு நடந்த அநீதிக்கு கண்டனம் தெரிவித்த த.மு.கூ.தலைவர்!!

Share

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

இன்று (04) ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து  உரையாற்றுகையில், பாகிஸ்தானில் இடம்பெற்ற இந்த துன்பகரமான சம்பவத்திற்கு அரசாங்கம் கேள்வி எழுப்பவேண்டும் . இதற்கான நீதிக்கு அரசாங்கம் போராட வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பில் நூறுபேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  நீதி நிலைநாட்டப்படும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார் இது வரவேற்கத்தக்கது.

இதே தவறுகள் மீண்டும் நடைபெறமுடியாத அளவிற்கு அரசுகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

 

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா செல்லவுள்ளது. இந்திய பிரதமரை சந்திப்பதற்கான முடிவுகள் இந்னும் எடுக்கப்படவில்லை. அவர்கள் முதலில் சென்று வரட்டும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...