25 68fb1c1d6b80d
செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர மரணம்: தலையில் மற்றும் மார்பில் பலத்த காயம் – சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உறுதி!

Share

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம், துப்பாக்கிச் சூட்டினால் தலை மற்றும் மார்பின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்களே ஆகும் எனப் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாத்தறை பொது மருத்துவமனையின் விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. லசந்த விக்ரமசேகரவின் உடலில் இருந்து மொத்தம் ஆறு தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட அபாயகரமான காயங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, லசந்த விக்ரமசேகர சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, நேற்று முன்தினம் (அக்22) தனது உத்தியோகபூர்வ அலுவலக அறையில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...