9d3028b0 ffa1 11ed b00f ddb5dcfba4e2.jpg
செய்திகள்இலங்கை

நிலச்சரிவில் வெளிப்பட்ட நீல நிறப் பாறை – ரத்தினக் கல்லா என மக்கள் வியப்பு!

Share

டிட்வா (Ditwa) சூறாவளி காரணமாக நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, கலஹா பகுதியில் பாரிய நீல நிறப் பாறை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கலஹா, கல்லந்தென்னாவ தெல்தோட்ட கீழ் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவிலுக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், மண்ணுக்குள் புதைந்திருந்த ஒரு பெரிய நீல நிறப் பாறை (கல்) வெளியே தெரிந்துள்ளது.

வெளியே விழுந்த அந்தப் பாறை ஒரு வகை விலையுயர்ந்த நீல ரத்தினக் கல்லாக (Blue Sapphire) இருக்கலாம் என அப்பகுதி மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அந்தப் பாறையைப் பார்ப்பதற்காகப் பெருமளவிலான மக்கள் அப்பகுதியில் ஒன்று கூடி வருகின்றனர்.

நிலைமையைக் கருத்திற்கொண்டு, குறித்த இடத்தின் பாதுகாப்பிற்காகவும், அந்தப் பாறையைப் பாதுகாக்கவும் கலஹா பொலிஸார் தற்போது விசேட பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த கல் உண்மையான ரத்தினக் கல்லா அல்லது சாதாரண பாறையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அது தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினருக்கு (National Gem and Jewellery Authority) அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களின் பரிசோதனைக்குப் பின்னரே அது குறித்த உண்மைத் தன்மை தெரியவரும்.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...