WhatsApp Image 2026 01 19 at 14.13.35
உலகம்செய்திகள்

சிலி நாட்டில் காட்டுத்தீ ருத்ரதாண்டவம்: 18 பேர் உயிரிழப்பு – 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்!

Share

தென் அமெரிக்க நாடான சிலியில் (Chile) பரவி வரும் கடும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. நிலமை மோசமடைந்து வருவதால் அந்நாட்டு ஜனாதிபதி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

தீயில் கருகி இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. சுமார் 20,000 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே 500 கிமீ தொலைவில் உள்ள உபிள் (Ñuble) மற்றும் பயோபியோ (Biobío) ஆகிய மாகாணங்களில் தீ மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.

காட்டுத்தீயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் பாதிக்கப்பட்ட இரண்டு பிராந்தியங்களில் சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் (Gabriel Boric) “பேரழிவு நிலை” (State of Catastrophe) என அறிவித்துள்ளார்.

வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீயணைப்பு வீரர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.கடலோர நகரமான கான்செப்சியனை ஒட்டிய காடுகளில் இருந்து வெளியேறும் கடும் புகை மூட்டத்தால் அப்பகுதியே இருண்டு காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலி நாடு சமீபகாலமாகப் பருவநிலை மாற்றத்தால் இவ்வாறான தொடர்ச்சியான காட்டுத்தீ விபத்துகளைச் சந்தித்து வருகிறது. இதற்கு முன்னர் வால்பரைசோ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் உயிரிழந்தது ஒரு கறுப்பு வரலாறாகக் கருதப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...