காணிப் பிரச்சினையால் கைகலப்பு - ஒருவர் பலி
செய்திகள்இலங்கை

காணிப் பிரச்சினையால் கைகலப்பு – ஒருவர் பலி

Share

காணிப் பிரச்சினையால் கைகலப்பு – ஒருவர் பலி

காணிப் பிரச்சினையால் இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், யாழ்ப்பாணம் சித்தங்கேணி, கலைவாணி வீதி பகுதியில், இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டாருக்கும் காணிப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், இன்று காலை அவருக்கும் அவரது அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன்போது குறித்த நபரும் அவரது மகளும் அயல் வீட்டுக்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த மகளும் குறித்த நபரும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்தார். அத்தோடு மேலதிக சிகிச்சைக்காக மகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...