காணிப் பிரச்சினையால் கைகலப்பு - ஒருவர் பலி
செய்திகள்இலங்கை

காணிப் பிரச்சினையால் கைகலப்பு – ஒருவர் பலி

Share

காணிப் பிரச்சினையால் கைகலப்பு – ஒருவர் பலி

காணிப் பிரச்சினையால் இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், யாழ்ப்பாணம் சித்தங்கேணி, கலைவாணி வீதி பகுதியில், இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டாருக்கும் காணிப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், இன்று காலை அவருக்கும் அவரது அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன்போது குறித்த நபரும் அவரது மகளும் அயல் வீட்டுக்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த மகளும் குறித்த நபரும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்தார். அத்தோடு மேலதிக சிகிச்சைக்காக மகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...