நாளையதினம் மாதகல் பகுதியில் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மாதகல் கடற்படையினரின் தேவைக்காகவே குறித்த காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளன.
மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக 3 பரப்பு காணி சுவீகரிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான அளவீட்டு பணிகள் நாளைதிங்கட்கிழமை காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, நாளை காலை 11 மணியளவில் மாதகல் மேற்கில் 16 ஏக்கர் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளை குறித்த காணிகளுக்கு முன்பாக காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என காணி அளவீட்டு க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பலரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்,
அனைத்து தரப்பினரிடமும் தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு காணி உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SriLankaNews