koli
செய்திகள்இந்தியா

கோலியின் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் – இளைஞன் கைது

Share

கோலியின் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞன் கைது.

இந்திய துடுப்பாட்ட வீரன் விராட் கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த 23 வயது இளைஞன் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

T 20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.

இந்தியா அணி அடுத்தடுத்து தோல்வியடைந்து வந்தது.

இதுகுறித்து, இந்திய வீரர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த விமர்சனங்களை கண்டித்து கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில் நபர் ஒருவர் கோலியின் 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ட்விட்ரில் மிரட்டல் விடுத்தரை தேடும் பணியில் பொலிஸார் இறங்கினர்.

விசாரணையில், தெலுங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த அகுபதினி ராம் நாகேஷ் (23) என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

மேற்கொண்ட விசாரணையில், நாகேஷ் சங்கராரெட்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

தேடப்பட்ட நிலையில், மும்பை பொலிஸார் நேற்று அதிகாலை கைது செய்தனர். அத்தோடு அவர் மீது வழக்கும் தாக்கல் செய்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...