மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமந்தியாறு, பனையறுப்பான் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன.
இதன்போது பெரும் எண்ணிக்கையிலான கோடாவுடனான பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வுப் பிரிவு மற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவு ஆகியோருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி நலீன் குணவர்த்தன, போதைப்பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி ஆகியோர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சட்டவிரோதமாக இயங்கி வந்த உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன.
இதன்போது, 3 ஆயிரத்து 960லீற்றர் கோடா, 100 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.
#SriLankaNews
Leave a comment