கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைபடுத்தும் தெருவை, தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்திற்குள்ளால், தங்களுடைய பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் இடுப்பளவு நீரிற்குள்ளால் பாடசாலைக்குச் செல்கின்றனர்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயண்படுத்திவரும் இவ்வீதியை தனியார் சிலர் அது தமது காணி எனத்தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியையும் அடைத்துள்ளனர்.
குறிப்பாக தனியார் காணி உரிமையாளர்கள், வீதியை மறித்தும் குளத்தின் ஒருபகுதியை இணைத்தும் தமது எல்லையை வரையறுத்துள்ளனர்.
இதன்காரணமாக சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வீதியானது சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து வீதிக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி அப்பகுதிவாசிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment