jaffna Protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கவனயீர்ப்பில் கொயிலாமனை மக்கள்!!

Share

கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைபடுத்தும் தெருவை, தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்திற்குள்ளால், தங்களுடைய பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் இடுப்பளவு நீரிற்குள்ளால் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

jaffna Protest 02

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயண்படுத்திவரும் இவ்வீதியை தனியார் சிலர் அது தமது காணி எனத்தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியையும் அடைத்துள்ளனர்.

குறிப்பாக தனியார் காணி உரிமையாளர்கள், வீதியை மறித்தும் குளத்தின் ஒருபகுதியை இணைத்தும் தமது எல்லையை வரையறுத்துள்ளனர்.

இதன்காரணமாக சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வீதியானது சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jaffna Protest 01

இதனையடுத்து வீதிக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி அப்பகுதிவாசிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...