download 2 1 23
இந்தியாசெய்திகள்பிராந்தியம்

சிசுவை தூக்கி வீசி கொலை!

Share

தான் பிரசவித்த சிசுவை தாய் ஒருவர் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் கொல்கத்தாவில்  கஸ்பா பகுதியில்  இடம்பெறுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின் பிரசவ அறையில் தனது குழந்தையை பிரசவித்துள்ளார். இந்நிலையில் குழந்தை பிறந்ததும் அழ ஆரம்பித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாது தனது சிசுவை  கழிவறையின் ஜன்னலை உடைத்து வெளியே வீசியுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு அங்கு  அயலவர்கள் சென்ற பொழுது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் தாயையும் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து தாய் மீது வழக்குப் பதிவு செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...