89b95931 paddy
செய்திகள்இலங்கை

கிளிநொச்சி – சிறுபோகத்தில் வரலாறு காணாத சாதனை!

Share

கிளிநொச்சி – சிறுபோகத்தில் வரலாறு காணாத சாதனை!

கிளிநொச்சி மாவட்டத்தில், இம்முறை சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை நிகழ்ந்துள்ளது என மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நான்கு மிகப்பெரிய குளங்களும் 5 நடுத்தர குளங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

2019 ஆண்டுக்கு முன்னர் 40சதவீதத்துக்கு குறைவாக காணப்பட்ட மாவட்டத்தின் சிறுபோக அளவானது இரணைமடு குளத்தின் புனரமைப்பின் பின்னர் 2019 இல் 68 வீதமாகவும் 2020 இல் 68.2 வீதமாகவும் இவ் வருடம் 2021 இல் 78.6 வீதமாகவும் அதிகரித்துள்ளது.

இவ் அதிகரிப்பானது கிளிநொச்சி மாவட்ட வரலாற்றில் இதுவரை காணப்படாத உச்ச அடைவு மட்டமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இம்முறை இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக செய்கை 82 வீதமாக பயிற்செய்கை குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இரணைமடு குளத்தின் கீழான ஏறக்குறைய 100% பயிற்செய்கை இம்முறை இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1749716262 image 42525c8345
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதி!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை...

ranil wickremesinghe 1540622362 tile 1652346881 1652542509 1658301653
செய்திகள்இலங்கை

இந்தியா பயணத்தின்போது: ரணில் விக்கிரமசிங்க தம்பதியினர் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாடு!

இந்தியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர்...

250925 AKD UNGA
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாத வலைக்குள் நாடு சிக்காது’: இலங்கை தினக் கொண்டாட்டம் மூலம் நல்லிணக்கம் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்படும்...

archuna 090325 seithy
செய்திகள்அரசியல்இலங்கை

அவருக்கு என்ன நடந்தது”: தந்தை காணாமல் போனது குறித்துக் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான்...