994E1B59 F9AB 4DB1 9240 285D9B42F72F
செய்திகள்இலங்கை

நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! – சிங்கள ராவய

Share

நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! – சிங்கள ராவய

கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் மேற்படி தெரிவித்துள்ளார்

மேலும், இராஜாங்க அமைச்சர்ரொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள கைதிகளை துப்பாக்கிமுனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரும் குற்றச்செயல் ஆகும்.

குற்றம் செய்தவர் பதவி விலகினால் மட்டும் போதாது. அவர் மிகப்பெரும் குற்றம் புரிந்துள்ளார். குறித்த இராஜாங்க அமைச்சர் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுத்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இது போன்ற செயற்பாடுகளில் அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருமாயின் எதிர்காலத்தில் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டி ஏற்படும். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியே அரசு அழிய வேண்டி ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...