சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சித்த யாழ் இளைஞன் கைது!!

image

சட்டவிரோதமாக போலியான ஆவணங்களை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக டுபாய் சென்று அங்கிருந்து கனடா செல்வதற்கு முயற்சித்த நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

அவரிடம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குடியகல்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் இதன் விமான நிலைய பொலிசார் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

Exit mobile version