jaffna 720x375 1
செய்திகள்இலங்கை

நிகழ்நிலையில் யாழ். பல்கலை பட்டமளிப்பு

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு நிகழ்வின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தலைமையில்
கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழாவை, கொவிட் பரவல் காரணமாக நடாத்துவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி மறுத்திருந்தார்.

பட்டக்கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களின் நன்மைக்காக, பட்டங்களை உறுதிப்படுத்தி, நிகழ்நிலையில் பட்டமளிப்பு விழாவை நடாத்த முடிவு செய்யப்பட்டதற்கு இணங்க, இன்று நிகழ்நிலையில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வில், துறைசார் பீடாதிபதிகளால் பட்டங்களை நிறைவு செய்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன.

கொவிட் பரவல் நிலை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர், சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு வைபம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...