WhatsApp Image 2021 12 14 at 5.23.36 AM e1639439670416
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ் – முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு! – அச்சத்துடன் பயணிக்கும் மக்கள் (வீடியோ)

Share

யாழ்ப்பாணம் – முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி செல்லும் புலோலி- கச்சாய் வீதியிலேயே இவ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில் இருந்து வடமராட்சி நோக்கி பயணம் செய்பவர்கள் இப் பாதையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவ் வீதி புனரமைப்பு செய்யப்பட்டு ஒரு வருடமே ஆகின்ற நிலையில் முள்ளி ஐய்யங்கண்டி மயானத்துக்கு அருகாமையில் உள்ள பாலத்துக்கு அருகாமையிலேயே வெடிப்பு ஏற்பட்டு வீதி கீழ் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் தென்மராட்சி பிரதேச செயலர் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன் அடிப்படையில் தற்காலிகமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதனூடாக ஒரு வழிப் பயணத்தையே மேற்கொள்ள முடிகிறது.

அதனூடக பாரவூர்திகள் தொடர்ந்தும் பயணிப்பதால் முற்றான பயணத்தடை ஏற்பட வாய்ப்புள்ளதுடன் ஆபத்தான பயணமாக அமைந்து காணப்படுகிறது.

எனவே இது தொடர்பில் மக்கள் அவதானமாக பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...