accident 8 750x375 1
செய்திகள்இலங்கை

யாழ். வாகன விபத்தில் முதியவர் பலி !

Share

பால் விற்பனையில் ஈடுபட்டு முடித்து, வீடு திரும்பிய முதியவரொருவர் வீட்டு வாசலின் முன்பு இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேர்ந்த 67 வயதான சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி எனும் நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் வழமைபோன்று நேற்றைய தினமும் (12) பால் வியாபாரத்தில் ஈடுபட்டு முடித்த பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதன்போது வீட்டு வாசலின் முன்பாக வீதியை கடக்க முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்தை நோக்கி அராலியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார் .

முதியவரை விபத்திலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முதியவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...