FGAVPt0UUAMUAao
செய்திகள்இலங்கைவிளையாட்டு

தம்புள்ளையை 8 விக்கெட்களால் வீழ்த்தியது ஜப்னா!!!

Share

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று(7) பிற்பகல் நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியை ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக நுவனிந்து பெர்னாண்டோ 23 ஓட்டங்களை பெற, ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் ஜப்னா கிங்ஸ் சார்பில் வனிந்து ஹசரங்க, மஹேஷ் தீக்ஷன ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், லக்மால் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் 111 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் 12.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கினை கடந்தது.

ஆரம்ப வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 ஓட்டங்களுடனும், அவிஷ்க பெர்னாண்டோ 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க டாம் கோஹ்லர்-காட்மோர் 45 ஓட்டங்களுடனும், சோயிப் மலிக் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்கதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மகேஷ் தீக்ஷன தெரிவானார்.

#Sports

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...