ankajan
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்களுக்கு கடிதம் அனுப்புவது எனது பணியல்ல – பிரதேச சபை உறுப்பினர்களிடம் அங்கஜன்!

Share

“ உங்களுக்கு கடிதம் அனுப்புவது எனது பணியல்ல, அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு மாவட்ட செயலகத்தில் அலுவலகமொன்று உள்ளது. அதன் ஊடாகவே அழைப்புக் கடிதங்கள் அனுப்படும்.”

இவ்வாறு வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு பதிலளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்.

‘கிராமத்துடனான உரையாடல்’ மூலமான திட்டத்தின்கீழ் பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான பிரதேச மட்டத்திலான கலந்துரையாடல் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது உறுப்பினர்களுக்கு உரிய நேரத்தில் அழைப்பு விடுக்காமை தொடர்பில் வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் அதிருப்தி வெளியிட்டார். அவ்வேளையில் அவருக்கும், அங்கஜனுக்கும் இடையில் கருத்து பறிமாற்றங்கள் இடம்பெற்றன.

“ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை என்பதை அறிந்தகையோடு, உரிய தரப்புகளை தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.” என அங்கஜன் பதிலளித்தார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரிக்கோ, கடந்த 15ஆம் திகதி குறித்த கூட்டங்களிற்கான கடிதம் ஒன்று மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இங்கே எமக்கு 17ஆம் திகதி திகதி இடப்பட்டு எமக்கு தொலைநகல் மூலமாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது .” – என்றார்.

இதற்கு பதில் அளித்து அங்கஜன் ராமநாதன், உங்களுக்கு கடிதம் அனுப்புவது எனது பணியல்ல. மாவட்ட செயலகத்தில் அதற்கென அலுவலகம் உள்ளது. அதன் ஊடாக அழைப்பு கடிதம் விடுக்கப்படும்.”- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...