arrest scaled
செய்திகள்இந்தியாபிராந்தியம்

நாடளாவிய சுற்றிவளைப்பு – 13 பேர் கைது!

Share

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 8 மதுபான சுற்றிவளைப்புகளில் எண்மர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 203 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 571 லீற்றர் கோடா, ஆறு செப்புத் தகடுகள், இரண்டு எரிவாயு அடுப்புகள், ஒரு எரிவாயு அடுப்பு என்பவற்றையும் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 240 புகைத்தல் பொருட்களுடன் கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருநாகல், பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாரளுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாரளுவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி, உடவளவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனஹடுவ வாவிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி பல்வேறு வகையான மரப்பலகைளுடன் பயணித்த டிரக்டரை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார் பலகைகளுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். பல்லேபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், கருவலகஸ்வௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரியன்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திமின்றி மரம் அறுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 21, 47 வயதுகளையுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...