Kehaliya Rambukwella
செய்திகள்இலங்கை

ஆசிரியர்களின் போராட்டம் வைரஸை பரப்பும் முயற்சியா?

Share

அண்மைக்காலமாக நாட்டில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் கொவிட் வைரஸை பரப்புவதற்கான ஓர் முயற்சியாக இருக்கலாம்.

இவ்வாறு சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசுக்கெதிரான போராட்டங்கள் வைரஸ் பரவலுக்கு விலை கொடுத்துள்ளன. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள், முன்னுதாரணமாக விளங்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை – என்றார்.

இதேவேளை, கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில்,

நாட்டில் கோவிட் பரவல் நிலைமையில் சுகாதார வழிகாட்டல்களை மீறி போராட்டங்களை முன்னெடுக்க நாம் அனுமதிக்கமாட்டோம் . நாட்டில் தொற்று நோய் நிலமை இன்னும் சீராகவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்.

ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான அடிப்படை மனித உரிமையின் கடுமையான மீறல் ஆர்ப்பாட்டம். தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையிலே நாட்டில் தொற்று நோய் காலத்தில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டத்தையும் நாங்கள் ஏற்கப்போவதுமில்லை மன்னிக்கப்போவதுமில்லை – எனவும் தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...