KULANTHAI
செய்திகள்இந்தியா

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உருவாக மது காரணமா? -நடப்பது என்ன?

Share

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தோன்ற மதுபான கடைகள் காரணம் என ஹெச்.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தமிழகத்தில் மதுபான கடைகள் அதிகளவில் திறப்பதால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள சில்வார்பட்டி பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்று பாரதிய ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப் போராடத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா அவர்கள்,

தமிழகத்தில் மதுக்கடைகளை அதிகமாக திறப்பதால் ஆண்கள் மத்தியில் ஆண்மை தன்மை குறைந்ததுள்ளதாகவும் அதனால் குழந்தையின்மை பிரச்சனை குடும்பங்களுக்கிடையில் பிரிவுகளை உண்டாகிறது.

இந்தக் கடைகளினால் இன்றைக்கு தமிழன் இயற்கையாக தன் மனைவிக்கே குழந்தை பெற்றுத்தர முடியாத நிலைமைக்கு வந்துவிட்டான்.

ஆகையால்தான் இப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அணுகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் தான் தமிழகத்தின் எல்லா மூலைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையம் அதிகரித்துள்ளது என கூறினார்.

மேலும் இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து அருகே உள்ள ரெட்டியார்சத்திரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...