ஐ.பி.எல் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன.
லீக் போட்டிகளில் புள்ளி அடிப்படையில் முதல் நான்கு இடங்களைக் கைப்பற்றிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன.
அரையிறுதிப் போட்டியின் முதலாவது பேர்ட்டியில், நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டில்லி கேப்பிட்டல் அணிகள்
மோதவுள்ளன.
நாளை மறுதினம் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்டஸ் அணிகள் மோதவுள்ளன.
அரையிறுதிப் போட்டியில் வெற்றியீட்டும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
போட்டிகள் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.