gun
செய்திகள்இலங்கை

யாழில் கடமைக்கு இடையூறு! – பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

Share

யாழ்ப்பாணத்தில் கடமைக்கு ஒத்துழைக்க மறுத்து இடையூறு ஏற்பட்டதால் பொலிஸார் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்க்க வேண்டி சம்பவம் ஊரெழு பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக் கவசம் இன்றி ஆபத்தான வகையில் பயணித்துள்ளனர்.

அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்று அவர்களுக்குத் தண்டப்பத்திரம் எழுத முற்பட்டபோது அவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.

அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். அவர் பொலிஸாருடன் வரம்பு மீறிச் செயற்பட்டதை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்தனர்.

அத்துடன், அவர்களை எச்சரித்ததாகத் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...